Friday, 29 August 2014

ஸ்ரீவாஞ்சியம், ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோவில்





                                  வக்ரதுண்ட  மஹாகாய  சூர்யகோடி சமப்ரப
                                   அவிக்னம் குருமேதேவ சர்வ கார்யேஷு சர்வதா!!

                    8.ஸ்ரீவாஞ்சியம்:-

         ஈஸ்வரன் பெயர் :- ஸ்ரீ வாஞ்சிநாதர்.
        அம்பாள்  பெயர் :- ஸ்ரீ மங்களாம்பிகை


     திருவாரூரில்  இருந்து  நன்னிலம்  வழியாக  ஸ்ரீவாஞ்சியம் அடையலாம். கும்பகோணத்திலிருந்து   ஸ்ரீவாஞ்சியம் 27 கி.மீ. தொலைவில் உள்ளது .  இது ஒரு முக்திக்ஷேத்திரம்  இங்குள்ள  லிங்கம்  சுயம்பு  லிங்கம் இந்த கோவில் பிரளயகாலத்திற்கு முன்பே தோன்றியது. உயிர்களை வதைத்த பாவம் தீர, எமதர்மராஜா பிரம்மாவிடம் உபாயம் கேட்க, பிரம்மா  சந்தனமரக்காட்டில் சிவனை  எண்ணி  தவம்செய்ய சொன்னார்.  எமன் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து  தவமிருந்தார். இந்த தவத்தை மெச்சிய சிவபெருமான் யமனுக்கு தனி சன்னிதி தந்து அவரை தரிசித்தபின்,வினாயகரை தரிசித்து,பின்னரே தன்னை தரிசிக்கவேண்டுமென வரம். அருளினார்.         

              
       இங்கு எமனுக்கு தனி கோவில். ஈஸ்வரனுடைய வாகனமே எமதர்மராஜாதான் .இக்கோவிலில் ஸ்ரீ அபயங்கர வினாயகர், ஸ்ரீ யோகபைரவர்,ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி சந்நிதிகள் உள்ளன.இங்கு முதலில் ஸ்ரீ யமதர்மராஜா சன்னிதியை தரிசித்துவிட்டு, பின்னர் ஸ்ரீ கணபதியை தரிசிக்க வேண்டும்.அதற்குப்பிறகுதான் மூலவரை தரிசிக்க வேண்டும். கங்கா நதியும் தன்  பாவத்தை போக்க  இங்குள்ள  குப்த கங்காதீர்த்தத்தில் ஸ்நானம் செய்ததாக வரலாறு சந்தியாகாலத்தில் ஸ்ரீ மங்களாம்பிகைக்கு வெண்மைநிறத்தில் புடவை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.சுமங்கலிகளின் தீர்க்கசௌமாங்கல்ய பாக்யத்திற்காக அம்பாள் வெண்மை நிற புடவை அணிவதாக ஐதீகம்..கார்த்திகை மாதத்தில் ஞர்யிற்றுக்கிழமை இங்கு விசேஷம்.             
                                                     


No comments:

Post a Comment